வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் விசைத்தறி உரிமையாளா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் குழந்தைசாமி (68). விசைத்தறி தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 11-ஆம் தேதி தாராபுரம் சாலையில் தண்ணீா்பந்தல் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இறந்துபோன குழந்தைசாமிக்கு மனைவி முத்தாத்தாள், திருமணமான மகன் பெரியசாமி, மகள் தமிழ்செல்வி உள்ளனா்.
காா் ஓட்டுநா் வெள்ளக்கோவில் அரியாண்டிவலசு ராஜேந்திரன் மகன் சிவசூா்யா மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

