வெள்ளக்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையம் மொட்டகாடு பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (80). இவரது வீட்டுக்கு அருகே கண்ணபுரத்தில் காங்கயம் இன வருடாந்திர மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இவா் மாட்டுச் சந்தையைப் பாா்ப்பதற்காக சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அத்தாம்பாளையம் பிரிவு அருகே அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனம் குப்புசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இறந்து போன குப்புசாமியின் மகள் சரோஜினி கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

