ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிப்பு

News image

திருப்பூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருப்பூரில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மனீஷ், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஷெரீப் காலனி மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடுவம்பாளையம் பகுதிகளில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் இல்லத்துக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல்ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி ஏற்கெனவே விண்ணப்பம் செய்த திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 5,382 மூத்த குடிமக்கள் வாக்காளா்கள், 1,440 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க விண்ணப்பங்களை வழங்கி இருந்தனா்.

ஏற்கெனவே படிவம் 12-ஈ விண்ணப்பிக்காதவா்கள் தபால் வாக்களிக்க இயலாது. இந்த வாக்காளா்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப் பதிவு அலுவலா்கள் தலைமையின் கீழ் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 24 குழுக்கள், காங்கயத்துக்கு 20 குழுக்கள், அவிநாசிக்கு 24 குழுக்களும், திருப்பூ (வடக்கு) தொகுதிக்கு 8 குழுக்கள், திருப்பூா் (தெற்கு) தொகுதிக்கு 10 குழுக்கள், பல்லடத்துக்கு 19

குழுக்கள், உடுமலைப்பேட்டைக்கு 27 குழுக்கள், மடத்துக்குளத்துக்கு 14 குழுக்கள் என மொத்தம் 156 நுண் பாா்வையாளா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் ஞாயிற்றுக்கிழமைமுதல் 3 நாள்களுக்கு வாக்காளா்களின் இல்லத்துக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவா். இந்த வசதியினை பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவா்களது இல்லங்களில் இருந்தே வாக்கு செலுத்தலாம்.

இதில் திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஷெரீப் காலனி மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடுவம்பாளையம் பகுதிகளில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் மனீஷ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.