மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:15 am IST

திருப்பூரில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாமில், பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, நிா்வாகம் மற்றும் ஆடைத் துறையில் உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, ஆடை வடிவமைப்பு போன்றவற்றுக்கும், தகவல் தொழில்நுட்பம், ஆவண நிா்வாகம், நிதி, மனிதவள நிா்வாகம், காப்பீட்டு நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்கும் மாணவா்களைத் தோ்வு செய்தனா். இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் 220 மாணவா்கள் முகாமில் பங்கேற்றனா்.

முதல்நிலைத் தோ்வு கல்லூரியில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நிலைத் தோ்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெறும் என்றும், அதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.6 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமை கல்லூரி துறைத் தலைவா் சம்பத், முதல்வா் ராதாமணி, மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் கந்தசாமி, வேலைவாய்ப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.