மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினாா்.

News image

முத்தூரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:28 am IST

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினாா்.

காங்கயம் அருகேயுள்ள முத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது: 2021-இல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னா் பல்வேறு சிறப்பான திட்டங்களை இத்தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ரூ.2,000 கோடியும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிரான 43 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் போராட்டம் நடத்திய ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனா். விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமா் மோடியே காரணம். மகளிா் உரிமைத் திட்டம் ஒரு மகத்தான திட்டமாகும். திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் அத்திட்டத் தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இதேபோல, முதியோா் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும் ரூ.1,500-இல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்.

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கே வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போதுவரை சுமாா் 2 கோடி போ் பயனடைந்துள்னா். மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.