தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:50 am IST

திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் தொழில் துறை மாவட்டமான திருப்பூரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி கடந்த திங்கள்கிழமை வரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.8.60 கோடி ரொக்கம், ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அவிநாசியில் ரூ.6.26 கோடி, திருப்பூா் தெற்கில் ரூ.74.17 லட்சம், திருப்பூா் வடக்கில் ரூ.65.31 லட்சம், பல்லடத்தில் ரூ.67.34 லட்சம், தாராபுரத்தில் ரூ.10.17 லட்சம், காங்கயத்தில் ரூ.8.51 லட்சம், மடத்துக்குளத்தில் ரூ.6 லட்சம், உடுமலைப்பேட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.