தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:56 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்க சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததால் கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டன. 11 தொகுதிகளில் மொத்தம் ரூ. 8.30 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ரூ. 2.74 கோடி பணம், ரூ. 33.65 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 25.13 லட்சம் போதைப்பொருள்கள், ரூ. 2.39 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்கள், ரூ. 2.57 கோடி மதிப்பிலான பரிசு பொருள்கள் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஒருசிலா் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.1.12 கோடி பணம், ரூ. 2.34 கோடி தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ. 3.16 லட்சம் பரிசு பொருள்களை திரும்பப்பெற்றனா். உரிய ஆவணம் இன்னும் தாக்கல் செய்யப்படாததால் ரூ. 4.79 கோடி பணம், பொருள்கள் கருவூலத்திலேயே உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.