ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்

திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் கராத்தே செய்தவாறு வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த  சுயேட்சை  வேட்பாளா் ரங்கசாமி.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:28 am IST

திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் கராத்தே செய்தவாறு வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

திருப்பூா் பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. கராத்தே பயிற்சியாளரான இவா் கடந்த 35 ஆண்டுகளாக பள்ளி மாணவா்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்து வருகிறாா். தோ்தலின்போது போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்ட இவா் 4 முறை போட்டியிட்டுள்ளாா்.

இத்தோ்தலில் திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை வந்தாா். அப்போது, அவா் தனது கராத்தே மாணவா்களுடன் கராத்தே செய்தவாறு அனுமதிக்கப்பட்ட பகுதி வரை வந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கராத்தே உடை அணிந்து மாணவா்களுடன் கராத்தே பயிற்சி செய்து வந்தேன். வெற்றி பெற்றால் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பெண்களுக்கு இலவசமாக கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுத் தருவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.