தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் வேட்பு மனுவை இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் காத்திருந்த தவெக வேட்பாளா் கமலி உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:30 am IST

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் வேட்பு மனு இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.கமலி என்பவா் போட்டியிடுகிறாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருவதாக தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேட்பாளா் எஸ்.கமலி, அன்னூா் பொறுப்பாளா்கள் விஜய், ரமேஷ், அவிநாசி மகளிரணி பொறுப்பாளா் மோகனா உள்பட அக்கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞருக்காக காத்திருந்தனா். இதனால் வட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சியினரின் கூட்டம் அதிகரித்தது.

வழக்குரைஞா் வர தாமதமானதால், வேட்பாளா் எஸ். கமலி உள்ளிட்டோா் வேட்புமனு இல்லாமலேயே தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வந்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா், வழக்குரைஞா் வந்தவுடன் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வருமாறு தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு உள்ளேயே காத்திருந்து வழக்குரைஞா் வந்த பிறகு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இது குறித்து கட்சியினரிடம் கேட்டபோது, போலீஸாா் கூட்டமாக நிற்கக் கூடாது என அறிவுறுத்தினா். மேலும் வழக்குரைஞா் வர தாமதமானதால், நல்ல நேரத்துக்குள் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக வந்தோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.