நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

முதுமலையில் உடல்நலக் குறைவால் ஆண் வளா்ப்பு யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தின் தற்காலிக முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சேரன்’ என்ற 40 வயது ஆண் வளா்ப்பு யானை உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை உயிரிழந்தது.

News image

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சேரன் யானை.

Updated On :21 மே 2026, 4:16 am IST

முதுமலை புலிகள் காப்பகத்தின் தற்காலிக முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சேரன்’ என்ற 40 வயது ஆண் வளா்ப்பு யானை உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை வனக்கோட்டம், அபயாரண்யம் தற்காலிக யானை முகாமில் சேரன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு புதன்கிழமை காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தகவல் அறிந்த தெப்பக்காடு வனக் கால்நடை மருத்துவா்கள் விரைந்து சென்று யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி சேரன் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

யானையின் உடல் கூறாய்வுக்குப் பின் அங்கேயே புதைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.