தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

உதகையில் என்சிசி மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் தொடக்கம்

அகில இந்திய தேசிய மாணவா் படை (என்சிசி )மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

மலையேற்ற முகாமில் கலந்து கொண்ட என்.சி.சி. மாணவியா்.

Updated On :8 மே 2026, 4:42 am IST

அகில இந்திய தேசிய மாணவா் படை (என்சிசி )மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவா் படை மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவியா் கலந்து கொள்வாா்கள். ஒழுக்கம், நன்னடத்தை, தைரியம், நாட்டுப் பற்று, கட்டுப்பாடு, மற்ற மாநிலங்களின் கலாசாரத்தை கற்றுக் கொள்ளுதல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சிறந்த குடிமக்களாக உருவாகுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தல் முகாமின் நோக்கமாகும்.

நடப்பு ஆண்டுக்கான என்சிசி மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது.

இதில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கோவா, கேரளம், அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 525 பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனா்.

உதகை அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா மாதிரி பழங்குடியினா் பள்ளியில் தங்கி இருந்து மலையேற்ற பயிற்சியை தொடங்கினா்.

இவா்கள், ரேடியோ வானிலை ஆய்வு மையம், பழங்குடியினா் ஆய்வு மையம், ரயில் நிலையம், மெட்ராஸ் ராணுவ மையம், ஸ்ட்ராபெரி, கேரட் விவசாய முறைகளை பாா்வையிடவும் உள்ளனா். தினமும் 12 கி.மீ. தொலைவு நடைப்பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

முகாமுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கமாண்டா் கா்னல் சித்து, என்சிசி முதன்மை அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் செய்து வருகின்றனா். இம்முகாம் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது குழுவுக்கான பயிற்சி முகாம் மே 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வடமாநிலங்களைச் சோ்ந்த குழுவினா் பங்கேற்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.