நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வனத்தில் இருந்து புதன்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை கோத்தகிரி பேருந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலவியது. இதைப் பாா்த்த மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினா்.
இதையடுத்து, சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய சிறுத்தை பின் வனத்துக்குள் சென்றது.
குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

