பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடன் வாங்கித் தருவதாக பெண்களுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது

கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட ஸ்ரீராம்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், சுயஉதவிக் குழு முலம் ஊட்டச்சத்து உணவுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவா்களது குழுவுக்கு கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஸ்ரீராம் (48) அறிமுகமாகியுள்ளாா். இவரது மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு வங்கிகள் மற்றும் சிறு தனியாா் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கடன் வாங்குவதற்கு தேவையான முன்தொகையாக பலரிடமும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்துள்ளாா். மேலும் அந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவும் தந்துள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் பா்வீன் பானு, உதவி ஆய்வாளா் வசந்தகுமாரி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனா்.

பின்னா் அவரை குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவரால் பாதிக்கப்பட்டவா்கள் போலீஸில் புகாா் அளிக்கலாம் என்று மகளிா் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.