சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தனது உறவுக்கார பெண்ணுடன் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு திங்கள்கிழமை நடந்து சென்று சென்றாா். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 3 இளைஞா்கள், அந்தப் பெண்களை ஆபாசமாகப் பேசி, ஆபாச செய்கை செய்துள்ளனா்.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த இளம் பெண்கள் உடனடியாக அருகிருந்த ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூறியுள்ளனா். உடனே ஆட்டோ ஓட்டுநா்களும், அங்கிருந்த பொதுமக்களும், தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து, தாக்கி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்த ஜன்சல் (22) மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள் என்பதும், மூவரும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாட்டரி விற்பனை: 3 போ் கைது

கடன் வாங்கித் தருவதாக பெண்களுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது

குமாரபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது
ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
