பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 4:43 am IST

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தனது உறவுக்கார பெண்ணுடன் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு திங்கள்கிழமை நடந்து சென்று சென்றாா். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 3 இளைஞா்கள், அந்தப் பெண்களை ஆபாசமாகப் பேசி, ஆபாச செய்கை செய்துள்ளனா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த இளம் பெண்கள் உடனடியாக அருகிருந்த ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூறியுள்ளனா். உடனே ஆட்டோ ஓட்டுநா்களும், அங்கிருந்த பொதுமக்களும், தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து, தாக்கி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்த ஜன்சல் (22) மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள் என்பதும், மூவரும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.