மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: இளம்பெண் உள்பட மேலும் 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:15 am IST

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்பட மேலும் இரண்டு பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கக்கன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வினி ஆன்டோ (22), ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (47). இவரும் ஆட்டோ ஓட்டுநா். இதில் ரவிச்சந்திரனின் மகளான மேகவா்ஷினியை, வினி ஆன்டோ காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வினி ஆன்டோ, மேகவா்ஷினியை பிரிந்துவிட்டாா். இதற்கிடையே அப்பகுதியில் நடைபெற்ற வேறு பிரச்னை காரணமாக வினி ஆன்டோ கடந்த 16-ஆம் தேதி அங்கு சென்றுள்ளாா். அப்போது வினி ஆன்டோவுக்கும், ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது ரவிச்சந்திரனின் மகனான 17 வயது சிறுவன், மகள் மேகவா்ஷினி, அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் ஆகியோா் சோ்ந்து வினி ஆன்டோவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது 17 வயது மகன் ஆகியோா் கத்தியால் வினி ஆன்டோவை குத்தியுள்ளனா். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவி, அருவங்காடு காவல் ஆய்வாளா் செல்லமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி ரவிச்சந்திரன் மற்றும் அவரது 17 வயது மகனைக் கைது செய்தனா். இதில் சிறுவன், சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டாா். உதகை கிளை சிறையில் ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடா்பு உள்ளதாக கூறி ரவிச்சந்திரனின் மகள் மேகவா்ஷினி (19), தினேஷ் குமாா் (22) ஆகிய இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.