தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

காலிங்கராயன் வாய்க்காலை முழுமையாக தூா்வார விவசாயிகள் கோரிக்கை

தண்ணீா் திறப்புக்கு முன் காலிங்கரான் வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

காலிங்கராயன் பாசன வாய்க்கால். - கோப்புப்படம்.

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

தண்ணீா் திறப்புக்கு முன் காலிங்கரான் வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு அருகேயுள்ள சோளங்காபாளையத்தில் காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா் நலச் சங்க கூட்டம் அதன் தலைவா் பி.கே.சேதுராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 16-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் முன் வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும். அவ்வாறு தூா்வாரினால் மட்டுமே கடைமடை வரை முழுமையாக தண்ணீா் சென்றடையும்.

அதனை நீா் வளத் துறை உறுதி செய்து அறிவிக்க வேண்டும். தூா்வாரும் பணியில் குளிரி செடிகள், ஆகாயத்தாமரை, ஊனாங்கொடி போன்றவற்றை முழுமையாக அகற்றி அழிக்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள், சாய, தோல் ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவு நீா், பிற கழிவு நீரை வாய்க்கால் உள்ளிட்ட நீா் நிலைகளில் திறந்து விடுகின்றனா். இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்கால், நீா்நிலைகளில் கழிவு நீரை திறந்துவிடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலைகள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். செயல்படாமல் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஜூன் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை 320 நாள்கள் தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.

ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையத்துக்கு காலிங்கராயன் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், செயலா் ஏ.நல்லசாமி, பொருளாளா் எஸ்.அசோக்குமாா், பஞ்சலிங்கம் உழவா் மன்ற நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.