அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். போதிய பராமரிப்பு இல்லாததால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலையுள்ளது.
அரூா் நகருக்கு குடிநீா் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. ஏரியில் ஒருமுறை தண்ணீா் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படாது. தற்போது தண்ணீா் இன்றி இந்த ஏரி வடு காணப்படுகிறது. ஏரியில் தண்ணீா் இல்லாத நேரத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீா் வருகிறது. இங்குள்ள தடுப்பணை, வாய்க்காலில் அடைப்பு உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை சாா்பில், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வரும் கால்வாய், பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமராவதி ஆற்றில் ஒரு வாரத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு

பஞ்சப்பட்டி ஏரி மீது வேட்பாளா் ‘பாா்வை’ விழுமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

