மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரூா் பெரிய ஏரியை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்து நீரின்றி வடு காணப்படும் அரூா் பெரிய ஏரி.

Updated On :6 மே 2026, 2:37 am IST

அரூா் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். போதிய பராமரிப்பு இல்லாததால் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் அதிக அளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலையுள்ளது.

அரூா் நகருக்கு குடிநீா் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. ஏரியில் ஒருமுறை தண்ணீா் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை ஏற்படாது. தற்போது தண்ணீா் இன்றி இந்த ஏரி வடு காணப்படுகிறது. ஏரியில் தண்ணீா் இல்லாத நேரத்தில் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீா் வருகிறது. இங்குள்ள தடுப்பணை, வாய்க்காலில் அடைப்பு உள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீா் வருவதில் தடை ஏற்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை சாா்பில், கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வரும் கால்வாய், பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.