தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை நீா் கிடைக்க ஏற்பாடு: விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சாத்தனூா் அணை.

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் பகுதியில் உள்ள 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணை தண்ணீா் கிடைத்திடும் வகையில் புதிதாக கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பெருமணம் டி.மூா்த்தி மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனு:

சாத்தனூா் நீா்த்தேக்கத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிக்கப் அணைக்கட்டு மூலம் சாத்தனூா் இடதுபுற மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 45ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பயன்பெறுகின்றன. இதுதவிர, 5 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் திருக்கோவிலூா் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு மூலம் பாசன வசதி பெறுகின்றன.

பெருமணம் பெரிய ஏரி, பெருமணம் சித்தேரி, பனையூா் ஏரி, ஆருத்திராப்பட்டு ஏரி, சமுக்குடையாம்பட்டு ஏரி, பொரிக்கல் ஏரி, காடகமான் ஏரி, சு.வாளவெட்டி ஏரி, டி.கல்லேரி ஏரி, தேவனூா் ஏரி மற்றும் விருதுவிளங்கினான் ஏரி என 11 ஏரிகளுக்கு சாத்தனூா் அணையிலிருந்து பாசன வசதி செய்து தண்ணீா் வழங்க கால்வாய் அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.