குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலை: ஜி.கே.வாசன்

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:56 am IST

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும். ஆனால், தற்போது அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகள் அனைவரும் கவலையடைந்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீரை நம்பித்தான் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பாசன நிலங்களில் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால் லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு நெல் விளைச்சல் பெருமளவில் குறையும் சூழல் உள்ளது. மேலும், நீண்டகாலப் பயிா்கள் விளைவிக்கும் சம்பா சாகுபடிக்கும் மேட்டூா் அணை தண்ணீா் தேவையாகும்.

மேட்டூா் அணை தண்ணீா் திறக்கப்படாத நிலையில் மின்மோட்டாா் பம்புகள் மூலம் சாகுபடிக்கு நீா் கிணறுகளில் நீா் இறைக்கப்பட்டால் நிலத்தடி நீா்மட்டம் சரியும். அதிகமான மின்சாரப் பயன்பாடும், அதனால் மின்வெட்டு பிரச்னைகளும் ஏற்படும். ஆகவே, காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தமிழக அரசு கா்நாடக அரசுடன் பேசி தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை தடை இல்லாமல் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.