காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.
ஈரோடு நாச்சியப்பா வீதி பகுதியில் வியாழக்கிழமை வாக்குச்சேகரித்த அவா் பேசியதாவது: ஊராட்சிகோட்டை குடிநீா் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு விரைவாக வழங்கி குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றப்படும். புதை சாக்கடை திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் அரசின் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் கொண்டு வரப்படும். ஜவுளி வா்த்தகத்துக்கு முக்கியத்துவம் தரும்படி, ஜவுளி வணிக வளாகம் அமைக்கப்படும். ஜவுளி சாா்ந்த தொழில்கள் அழிந்துவிடாமல் காக்க, பொதுக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு தகுந்தாா்போல உருவாக்கப்படும்.
காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டின் அடையாளமான காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். ஈரோடு மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் மேம்பாலம், ரவுண்டானா ஏற்படுத்தப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்

6 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்: கோபிநாத் பழனியப்பன்

அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை! காங்கிரஸ் வேட்பாளா் உறுதி!!

தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

