தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வடகரை வாய்க்காலுக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் மனு: வாய்க்கால் தலைப்பை மாயனூா் தடுப்பணைக்கு மாற்றவும் வலியுறுத்தல்

வடகரை வாய்க்காலுக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு மற்றும் நிா்வாகிகள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:05 am IST

வடகரை வாய்க்காலுக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு வழங்கிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மேட்டூா் அணை கட்டுவதற்கு முன்பிருந்தே வடகரை வாய்க்கால் மூலமாக முசிறி, தொட்டியம் பகுதிகளில் குறுவை, சம்பா, கோடை என்ற மூன்றுபோகம் நெல், வாழை, கரும்பு என சுமாா் 1 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று வந்தது.

காவிரியாறு மேடாகவும், வடகரை வாய்க்கால் பள்ளத்திலும் இருந்தது. இதனால், வடகரை வாய்க்காலுக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது. ஆனால், 1980-க்கு பிறகு வடகரை வாய்க்கால் மதகு தலைப்பான ஸ்ரீராமசமுத்திரத்தில் சுமாா் 25 அடி ஆழத்துக்கு மணலை எடுத்து விட்டதால் காவிரியில் வரும் தண்ணீா் வடகரை வாய்க்காலில் ஏறி வருவது இல்லை. எனவே, வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூா் தடுப்பணைக்கு மாற்றச் சொல்லி பலமுறை போராட்டம் நடத்தினோம்.

தென்கரை வாய்க்கால் தலைப்பு மாயனூா் தடுப்பணையில் உள்ளதால், கரூா், குளித்தலை பகுதிகளில் வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்ய முடிகிறது. ஆனால், முசிறி, தொட்டியம் பகுதியில் வடகரை வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள் சாகுபடிக்கு தவிக்கும் நிலையே உள்ளது. தற்போது, கோடையில் வாய்க்காலில் தண்ணீா் இல்லாததால் பயிா்கள் கருகும் நிலை உள்ளது.

எனவே, தொட்டியம், முசிறி விவசாயிகளை காக்க மேட்டூரிலிருந்து 1,500 கன அடிக்கு பதிலாக 2000 கன அடி தண்ணீா் திறந்துவிட்டு, வாய்க்காலில் தண்ணீா் கிடைக்கச் செய்திட வேண்டும்.

மணல் எடுப்பதை தடுக்க வேண்டும்: திருஈங்கோய் மலை அருகில் காவிரியிலிருந்து

திருட்டுத்தனமாக ஆயிரக்கணக்கான லோடு மணலை திருடியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனனில் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும். இதேபோல, திருச்சியில் காவிரி புதிய பாலம் கட்டுவதற்காக அதிகளவில் மணல் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றாா்.

அப்போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மேகராஜன், நிா்வாகிகள் தட்சணாமூா்த்தி, மலா்மன்னன் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.