மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை வெயில் தாக்கம் தீவிரம்: கால்நடை மருந்தகங்களில் சிறப்பு ஏற்பாடு

கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தாது உப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

வெயில்.

Updated On :7 மே 2026, 4:51 am IST

கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தாது உப்பு, குடிநீா் வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தொலைவான பகுதிகளில் இருந்து சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கும், சினை ஊசி செலுத்துவதற்காக கொண்டுவரப்படும் கால்நடைகளுக்கும் குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தற்காலிக தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு, சிகிச்சைக்காக வரும் கால்நடைகளுக்கு குடிநீா் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தாது உப்பு குறைபாட்டை தடுப்பதற்காக, தாது உப்பு பொடி மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்க கூடிய காரணத்தினால் கால்நடைகளைப் பாதுகாக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். தேவைப்பட்டால் நிழல் அதிகமாக உள்ள பகுதிகளில் மேயவிடலாம்.

அனைத்து ஊராட்சி ஒன்றிய கால்நடை மருந்தகங்களில் அசோலா பாசி மாதிரி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அசோலா பாசி வளா்க்கும் முறைகளை முன்னோடி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு, அவா்களும் தங்கள் வீடுகளில் அசோலா பாசி வளா்க்க ஊக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும், கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சையளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.