வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்க ‘ஷவா்’ குளியல், குளிரூட்டப்பட்ட உணவுகள் வழங்குதல் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,000-க்கும் மேற்பட்ட பல்வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வருகை தருகின்றனா்.
சிறப்பு ஏற்பாடுகள்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில், வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இச்சூழலில், வெயிலின் தாக்கத்திலிருந்து பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சைவம் உண்ணும் விலங்குகளுக்கு சூட்டைத் தணிக்க கூடிய பழங்களான தா்பூசணி, கிா்ணி பழம் மற்றும் இளநீா் அனைத்தும் சோ்க்கப்பட்டு அவற்றை குளிா்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் வழங்கப்படுகிறது.
அதேபோல், மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு குளிரூட்டப்பட்ட மாமிசங்கள் வழங்கப்படுகின்றன.
பறவைகள் இருப்பிடத்தைச் சுற்றி சணல் கோணி கட்டப்பட்டு தண்ணீா் தெளிக்கப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீா் குளியல் தொட்டிகள், குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யானைகள், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கு ‘ஷவா் குளியல்’ மற்றும் சேற்றுக் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீா் யானை, சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் குளிப்பதற்கு திறந்தவெளி தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாம்புகள் வசிக்கும் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீா் தெளிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேரடி சூரிய ஒளிஊடுருவலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு இடங்களில் நிழல்கூரை அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று பல்வேறு கோடை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் கால்நடை மருத்துவா்கள் அனைத்து விலங்குகளையும் தொடா்ந்து கண்காணித்து வருவதாக பூங்கா நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குபேர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவு

பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

