ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களின்பேரில் ரூ.1.10 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினா், நிலைக் கண்காணிப்பு குழுவினா், போலீஸாா் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இதில் மாவட்டத்தில் புதன்கிழமை வரை ரூ.1.10 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெருந்துறை தொகுதியில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 500, கோபி தொகுதியில் ரூ.53,600, பவானிசாகா் தொகுதியில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் என ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 100 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை ரூ.1 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 89 ஆயிரத்து 310 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 600 கருவூலத்தில் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் பறக்கும் படையினா் மீட்ட தொகையில் ரூ.1.21 கோடி திரும்ப ஒப்படைப்பு!

மன்னாா்குடி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 900 சேலைகள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
