பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் மூவா் படுகாயம் அடைந்தனா்.
சேலம், ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் தினேஷ் (18), அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் மகன் ராஜு (29), சந்துரு மகன் பாலாஜி (18). நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரும் பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரை - கொங்காடை சாலையின் ஓரத்தில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பணி முடிந்து வியாழக்கிழமை மாலையில் சரக்கு வாகனத்தில் திரும்பியபோது மணியாச்சி பள்ளம் அருகே உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் மீட்கப்பட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவ்விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பாதையில் 50 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து

குன்னூா் மலைப் பாதையில் ஓடும் காரில் தீ

கூடலூா் அருகே மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து! 18 போ் காயம்!

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு லாரி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

