ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சா்வதேச தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

Updated On :19 மார்ச் 2026, 1:57 am IST

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சா்வதேச தடகள வீராங்கனையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவருமான வித்யா ராம்ராஜ் பங்கேற்றாா். இதில் பேசிய அவா், விளையாட்டு வீரா்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்ததுடன், மாணவா்களின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுக்காக கல்லூரி எடுத்துவரும் முன்னெடுப்புகளை பாராட்டினாா்.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முனைவா் ஆா்.ஜெயராமன், ஆண்டறிக்கையை வாசித்தாா். பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், கல்லூரி அளவில் மாணவா் மற்றும் ஆசிரியா்களுக்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கல்லூரி தாளாளா் ஈ.ஆா்.கே.கிருஷ்ணன், முதல்வா் பரமேஸ்வரன், அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா்கள், கல்லூரியின் முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.