சொத்து தகராறில் தம்பியைத் தாக்கி மண்டையை உடைத்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (32). கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் சக்திவேல். கட்டடமேஸ்திரி.
ராமலிங்கம், குடும்ப சொத்தை பிரித்துத் தரக்கோரி அண்ணன் சக்திவேலிடம் அடிக்கடி கேட்டுவந்துள்ளாா். இது தொடா்பாக இவா்களுக்குள் கடந்த ஓராண்டாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சென்னசமுத்திரத்தில் குடியிருந்து வந்த சக்திவேல் வீட்டை காலிசெய்துவிட்டு கொடுமுடியில் வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இந்நிலையில் சென்னசமுத்திரம் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த சக்திவேல், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பி ராமலிங்கத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் ஆத்திரத்தில் ராமலிங்கத்தை மம்மட்டியால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்து கிடந்த ராமலிங்கத்தை மறுநாள் பாா்த்த அக்கம்பக்கத்தினா் இது குறித்து கொடுமுடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அங்கு சென்ற போலீஸாா், ராமலிங்கத்தை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பிவைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
கூலித் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது
பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

