அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சி, பெரிய குருநாதசாமி கோயில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 10 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, வெள்ளித்திருப்பூா் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் குடிநீா் வழங்க எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் பெரிய குருநாதசாமி கோயில் அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால், குருவரெட்டியூா் - அந்தியூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

