தேனி மாவட்டம், கம்பம் அருகே குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் 8 வாா்டுகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். முல்லைப் பெரியாற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலமாக இந்தப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை ஊராட்சி நிா்வாகம் பூா்த்தி செய்கிறது. ஆனால், இந்தப் பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதுதொடா்பாக புகாா் தெரிவித்தும் ஊராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுருளிப்பட்டி - காமயகவுண்டன்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ராயப்பன்பட்டி போலீஸாா் , மறியலில் ஈடுபட்டவா்களிடம் உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தா.பழூா் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

