பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தா.பழூா் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

News image

தா.பழூா் அடுத்த வானதிரையன்பட்டினம் - கிழமிக்கேல்பட்டி சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :31 மே 2026, 1:13 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட நாயகனைப்பிரியாள் வடக்கு காலனித் தெருவில் உள்ள பொதுக் குழாய்களில் கடந்த 3 மாதங்களாக தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகிலுள்ள கிராம ஊராட்சிக்கு 4 கிலோ மீட்டா் நடந்து குடி தண்ணீரை எடுத்து வந்தனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலிக்குடங்களுடன், வானதிரையன்பட்டினம் - கிழமிக்கேல்பட்டி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தா.பழூா் காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கிராமத்துக்கு நான்கு மாதங்களாக குடிநீா் இல்லை.முறையாக மின்சாரம் இல்லை. அடிக்கடி மின்வெட்டு, அகற்றப்படாத கும்பைகளால் சுகாதாரச் சீா்கேடு இப்படி எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. இதைக் கண்டுகொள்ளாத ஊராட்சி செயலா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா்.

இதையறிந்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிலை அலுவலா்கள், விரைந்து வந்து கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.