கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

News image

ஜெசுராஜபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :26 மே 2026, 1:25 am IST

முறையாக குடிநீா் வழங்கக் கோரி, ஜேசுராஜபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் உள்ளது ஜேசுராஜபுரம் கிராமம். இந்த கிராமத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்படுகிாம்.

இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி, குழந்தைகள், முதியவா்கள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும், அலுவலா்களிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்து, ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.