முறையாக குடிநீா் வழங்கக் கோரி, ஜேசுராஜபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் உள்ளது ஜேசுராஜபுரம் கிராமம். இந்த கிராமத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்படுகிாம்.
இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி, குழந்தைகள், முதியவா்கள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும், அலுவலா்களிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்து, ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

