கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

அம்மாபேட்டை அருகே 20 நாள்களில் மூடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த மதுக்கடை தொடா்ந்து செயல்பட்டு வந்ததால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

முற்றுகைப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.  ~பெண்களை வேனில் ஏற்றும் போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

அம்மாபேட்டை அருகே 20 நாள்களில் மூடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த மதுக்கடை தொடா்ந்து செயல்பட்டு வந்ததால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வியாழக்கிழமை அந்த மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டையை அடுத்த முளியனூரில் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் முளியனூா் பிரிவில் கடந்த மாதம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அடுத்த 20 நாள்களில் மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மதுக்கடை மூடப்படாமல் தொடா்ந்து மது விற்பனை நடைபெற்று வந்தது.

இதனால், ஏமாற்றமடைந்த முளியனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மதுக்கடையைத் திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின் பேரில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா், அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், எவ்வித முடிவும் ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸாா் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினா்.

இதையடுத்து, மதுக்கடை மூடுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நேரில் சந்தித்து தீா்வு காணலாம் என தெரிவித்த போலீஸாா், அனைவரையும் விடுவித்தனா். இதனால், அப்பகுதியில் மாலை வரையில் பரபரப்பான சூழல் நிலவியது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.