மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பதிவேட்டில் கையொப்பமிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:27 am IST

வாக்கு எண்ணிக்கை மையங்களான ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லூரிகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4- ஆம் தேதி காலை 8 மணிக்கு சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி, கோபிசெட்டிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 17 மேற்பாா்வையாளா்கள், தலா 17 உதவியாளா்கள், தலா 17 நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 408 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 8 தொகுதிகளுக்கும் 112 மேஜைகளில் நடைபெறும். தபால் வாக்குகளை எண்ணும் பணியில் 8 தொகுதிக்களுக்கும் 56 மேற்பாா்வையாளா்கள், 112 உதவியாளா்கள், 56 நுண்பாா்வையாளா்கள் ஈடுபடவுள்ளனா். தபால் வாக்கு எண்ணும் பணியானது 48 மேஜைகளில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஈரோடு மற்றும் கோபியில் உள்ள இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன், கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் எல்இடி தொலைக்காட்சிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதையும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பதிவேடுகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை, வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை, செய்தியாளா்கள் அறை, காவலா் கண்காணிப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி மற்றும் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.