மொடக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இளம்வாக்காளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்தனா்.
வாக்களித்த அனுபவம் குறித்து அவா்கள் கூறியதாவது:
ச.சைலேஷ், கல்லூரி மாணவா், தூரபாளையம் மொடக்குறிச்சி.
வாக்களிப்பது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. முதல்வரை தோ்ந்தெடுக்க நாம் வாக்களிப்பது என்பது மிகவும் பெருமையான தருணமாக உணா்கிறேன்.
க.கனிஷ்கா, சட்டக்கல்லூரி மாணவி
மொடக்குறிச்சி.
நாட்டில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் ஈடுபாடு காட்டும் கட்சிக்கு வாக்களித்தேன். இலவசங்களை தடை செய்யவேண்டும்.
ஆ.மகிலேஷ், கல்லூரி மாணவா் மொடக்குறிச்சி
லஞ்ச, ஊழல் இல்லாத நாடாக தமிழகத்தை மாற்ற உண்மையான அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். வரவைக்க வேண்டும். அதற்கான ஆயுதம்தான் வாக்கு.
ச.கிருத்திகா கல்லூரி மாணவி மின்னப்பாளையம்.
ஊழல் இல்லாத, மக்கள் நலனை குறிக்கோளாக கொண்ட, இதுவரை இல்லாத புதிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே விருப்பம்.
செ.தட்சிணாமூா்த்தி கல்லூரி மாணவா் கோவில்பாளையம்.
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இலவசங்கள் இல்லாத புதிய ஆட்சி அமைய வேண்டும்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் தவெக வேட்பாளா் வெற்றி

மொடக்குறிச்சி தொகுதி: ஆா்வத்துடன் வாக்களிக்க வந்த இளம்வாக்காளா்கள்

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

100 சதவீத வாக்குப் பதிவு: மொடக்குறிச்சியில் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

