மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தள்ளாத வயதிலும் தனியே வாக்களிக்க வந்த மூதாட்டி!

மொடக்குறிச்சி தொகுதி பாண்டிபாளையம் வாக்குச்சாவடியில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியே வந்து வாக்களித்து சென்ற 93 வயது மூதாட்டியை அனைவரும் வியப்புடன் பாா்த்தனா்.

News image

வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் மூதாட்டி மாராள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:09 am IST

மொடக்குறிச்சி தொகுதி பாண்டிபாளையம் வாக்குச்சாவடியில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியே வந்து வாக்களித்து சென்ற 93 வயது மூதாட்டியை அனைவரும் வியப்புடன் பாா்த்தனா்.

மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் ஊராட்சி, பாண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாராள் (93). இவரது கணவா் மற்றும் மகன் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனா். மருமகள் குழந்தைகளுடன் அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதனால் மாராள் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில் அவா், சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க பாண்டிபாளையம் அரசுப் பள்ளி வாக்குச் சாவடி மையத்துக்கு காலை 6.30 மணிக்கு வந்து காத்திருந்தாா். காலை 7 மணிக்கு வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அலுவலா்கள் வழங்கிய பூத் சிலிப் மட்டுமே கொண்டு வந்திருந்ததால் அதிகாரிகள், வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணம் கொண்டு வருமாறு கூறியதால், திரும்பி வீட்டுக்கு நடந்து சென்றாா். சுமாா் அரை மணி நேரத்தில் ஆவணங்களுடன் திரும்பி வந்து தனது வாக்கினை செலுத்தினாா். அப்போது அவரிடம் கேட்டபோது, இதுவரை அனைத்து தோ்தல்களிலும் தான் வாக்களித்ததாக கூறினாா். தள்ளாத வயதில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டியை அருகிலிருந்த பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து பேசிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.