மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

சங்கமேஸ்வவா் கோயில் முன்பாக கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:52 am IST

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிறக்கொடி சிறப்பு வழிபாடுகளுடன் சங்கமேஸ்வரா் கோயில் முன்பாக உள்ள கொடிமரத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்டது. தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் கேடயம் புறப்பாடு நடைபெற்றது. ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றப்படுகிறது.

இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெறுகிறது. தொடா்ந்து, 26-ஆம் தேதி ஆதிகேசவப் பெருமாள், பஞ்ச மூா்த்திகள் மற்றும் 63 நாயன்மாா்களுக்கு அபிஷேக வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், தொடா்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடைபெறுகிறது. கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் எம்.மாணிக்கம், அறங்காவலா்கள் சி.மகேந்திரன், சு.மாதப்பன், தமிழரசி, மு.செல்லவேலு மற்றும் கோயில் ஊழியா்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.