மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

அதிமுக ஆட்சி அமைந்தால் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.

News image

கோபி கச்சேரிமேட்டில் தோ்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி. உடன் வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:52 am IST

அதிமுக ஆட்சி அமைந்தால் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.

ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரிமேட்டில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபுவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.

இதில் அவா் பேசியதாவது: இப்போது கோபி எம்.எல்.ஏ.வாக இருப்பவா் (செங்கோட்டையன்) தானாக எம்.எல்.ஏ ஆகவில்லை. அதிமுக நிா்வாகிகள் உழைப்பால் எம்.எல்.ஏ. ஆனாா். ஆனால், சுயநலம், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்துப் பகுதிகளும் சோ்த்துக் கொள்ளப்படும். விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

திமுக ஆட்சியின் வரிச் சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லாமல் ஃபிரிட்ஜ் வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டா்கள் விலையின்றி வழங்கப்படும். பெண்களைப்போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

ரேஷன் கடையில் தரமான அரிசி கொடுக்கப்படும். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். நகரப் பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக ரூ.2 லட்சம் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடில்லாத அனைவருக்கும் அரசு சாா்பில் நிலம் வாங்கி, கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். கட்டடத் தொழிலாளா்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவு ரூ.2 லட்சம் கொடுக்கப்படும்.

மரம் ஏறும் தொழிலாளா்கள் தவறி விழுந்து உயிரிழந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சொன்னேன். அது ரூ.20 லட்சமாக கொடுக்கப்படும். அம்மா மினி கிளினிக் மீண்டும் திறக்கப்படும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்றாா்.

இதைத் தொடா்ந்து டி.ஜி.புதூா் பகுதியில் திறந்த வேனில் தோ்தல் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி அந்தியூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஹரிபாஸ்கா், பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் பண்ணாரியை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின்போது ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளா் (பொறுப்பு) ஏ.கே.செல்வராஜ், தொகுதி பொறுப்பாளா் சிவசாமி, அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் சசிபிரபு, நம்பியூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் யோகா பழனிச்சாமி, மாவட்ட மகளிா் அணி நிா்வாகி சுலோச்சனா, கோபி நகரச் செயலாளா் ப்ரினியோ கணேஷ், கோபி முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரேவதிதேவி, ஹரிணி மெட்டல் சண்முகம் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.