மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

சங்ககிரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

News image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - ENS

Updated On :17 ஏப்ரல் 2026, 6:37 pm IST

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரத்தில் விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மளிகைக் கடைகளில் எப்படி அரிசி தரமாக இருக்கிறதோ அதே தரத்தில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும். இனி நீங்கள் கடைக்கு சென்று காசு கொடுத்து அரிசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ரேஷன் கடைகளிலே தரமான அரிசி கிடைக்கும். கொடுப்போம். எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. ஏழைகளுக்கான இந்த திட்டத்தை அதிமுக நிச்சயம் நிறைவேற்றியே தீரும். அதேபோல எண்ணெய் மற்றும் பருப்பும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

அதேபோல வாக்குறுதிகளில் சொன்னபடி அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், இலவச பிரிட்ஜ் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகத் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்" என்று பேசியுள்ளார்.

Summary

High-quality Grade 1 rice will be provided at ration shops: EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.