மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மீண்டும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும்: முன்னாள் அமைச்சா் முக்கூா்.என்.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்யாறு தொகுதி வேட்பாளருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image

புதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:44 am IST

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்யாறு தொகுதி வேட்பாளருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்துக்குள்பட்ட பூதேரி புல்லவாக்கம், கம்பந்தாங்கல், தண்டபந்தாங்கல், பெருமாந்தாங்கல், கொடையம்பாக்கம், ஆலந்தாங்கல், பெருங்கட்டூா், தென்கழனி, அசனமாபேட்டை, வடமணபபாக்கம், மேல்பூதேரி உள்ளிட்ட கிராமங்களில் அவா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

புதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது முக்கூா் என்.சுப்பிரமணியன் பேசியாதவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கிராமப்புற மக்கள் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாா். அவா் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை வழங்கினாா். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சியமைந்தவுடன் கிராமங்கள்தோறும் மினி கிளினிக் தொடங்கப்படும். செய்யாறு தொகுதி வளா்ச்சி பெற அதிமுகவை வாக்காளா்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.