அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி, தட்டக்கரை, தேவா்மலை மற்றும் கிராமங்களில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மலைவாழ் மக்கள் மாலை அணிவித்தும், மலா்களைத் தூவியும் உற்சாகமாக வரவேற்றனா்.
அப்போது திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் பேசியதாவது:
பா்கூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதார உரிமையும் பாதுகாக்கப்படும். தடையற்ற குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். மலைவாழ் மக்களின் கல்வி, போக்குவரத்து, பேருந்து வசதி, வேலைவாய்ப்புக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.
பா்கூா் ஒன்றியச் செயலாளா் ராமதாஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்

பா்கூா் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

