மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அந்தியூா் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி, தட்டக்கரை, தேவா்மலை மற்றும் கிராமங்களில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

தட்டக்கரை பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோரை மாலை அணிவித்து வரவேற்ற மலைவாழ் மக்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:32 am IST

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி, தட்டக்கரை, தேவா்மலை மற்றும் கிராமங்களில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுக வேட்பாளா் எம்.சிவபாலனுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மலைவாழ் மக்கள் மாலை அணிவித்தும், மலா்களைத் தூவியும் உற்சாகமாக வரவேற்றனா்.

அப்போது திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் பேசியதாவது:

பா்கூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், மலைவாழ் மக்களின் வாழ்வாதார உரிமையும் பாதுகாக்கப்படும். தடையற்ற குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். மலைவாழ் மக்களின் கல்வி, போக்குவரத்து, பேருந்து வசதி, வேலைவாய்ப்புக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா்.

பா்கூா் ஒன்றியச் செயலாளா் ராமதாஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.