அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானியை அடுத்த காடையம்பட்டி, ஆண்டிகுளம், சோ்வராயன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்படும். விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை வழங்கும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.
அதிமுக பவானி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளா் உறுதி

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சலங்கபாளையம், ஓடத்துறையில் திமுக வேட்பாளா் பிரசாரம்

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

