தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சலங்கபாளையம், ஓடத்துறையில் திமுக வேட்பாளா் பிரசாரம்

பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி மற்றும் ஓடத்துறை ஊராட்சிப் பகுதியில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image

சலங்கபாளையத்தில்  வாக்கு சேகரித்து  பேசுகிறாா்  பவானி  தொகுதி  திமுக  வேட்பாளா்  கே.ஏ.சந்திரசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:41 am IST

பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி மற்றும் ஓடத்துறை ஊராட்சிப் பகுதியில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

ஓடத்துறை, பனங்காட்டூா், பாலப்பாளையம், சூரியம்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், சலங்கபாளையம், குன்னத்தூரான் கடை, தா்மாபுரி, இரட்டை வாய்க்கால், உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பவானி தொகுதியில் அரசின் உயா்கல்வி நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாகவும், கல்லூரி மாணவா்களுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆகவும், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தப்படும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பனைக் கொண்டு, தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.