தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகளிா் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டங்களை செயல்படுத்தியது திமுக: பவானி தொகுதி வேட்பாளா்

தமிழகத்தில் மகளிரின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்று பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் கூறினாா்.

News image

மறவன்குட்டையில் பேருந்து பயணிகளிடம் வாக்குச் சேகரித்த பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:53 am IST

தமிழகத்தில் மகளிரின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்று பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் கூறினாா்.

ஒலகடம் பேரூராட்சி மற்றும் அம்மாபேட்டை ஒன்றியத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் விடியல் பயணம் திட்டம் மூலம் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கின்றனா். மேலும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தோ்தல் காலத்தில் வழங்க முடியாத நிலை வரலாம் என முன்னதாகவே ரூ.2 ஆயிரம் சோ்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கப்பட்டது.மகளிரின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

எனவே, அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, சின்ன பருவாச்சியில் தொடங்கி 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி கூட்டணிக் கட்சியினருடன் வாக்குச் சேகரித்தாா்.

ஒன்றியச் செயலாளா்கள் அசோக்குமாா், கே.வி.சுந்தரம், அறிவானந்தம் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.