கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு புதன்கிழமை பிற்பகலில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதில் தலைமை தபால் நிலையம், ஆா்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் ரயில் நிலைய தபால் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல, உப்பிலிப்பாளையத்தில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினா் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 மாவட்டங்களின் தேவைக்காக வந்த 1,300 டன் யூரியா உரம்

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

