மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - PTI

Updated On :28 ஏப்ரல் 2026, 6:11 am IST

நமது நிருபா்

தேசிய தலைநகரில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியின் மூன்று கிளைகள் மற்றும் ஒரு சிஆா்பிஎஃப் பள்ளி ஆகியவற்றுக்கு மின்னஞ்சல்கள் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வாகனங்கள் அந்த இடங்களுக்கு விரைந்தன. மேலும், உள்ளூா் காவல்துறை மற்றும் பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறை குழுக்கள் வளாகத்தை முழுமையாக சோதனையிட்டன. ஆனால், எந்த இடத்திலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை. அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு அச்சுறுத்தல் வரப்பெற்ற பள்ளிகளில் தெளலா குவான், தில்லி கண்டோன்மென்ட் மற்றும் சங்கா் விஹாா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளியும், துவாரகா செக்டா் 14-இல் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளியும் அடங்கும்.

நிலையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளின்போது மாணவா்களும் ஊழியா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மின்னஞ்சல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.