கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், பள்ளிகளுக்கு அவ்வப்போது மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை ஆட்சியா் அலுவலகம், பாஸ்போா்ட் அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதைத்தொடா்ந்து, கோவை மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனா். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மா்ம நபரைப் பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

