தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் தமிழகம் முழுவதும் 61 தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளா்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த தோ்தல் ஜனநாயகத் திருவிழாவாக இல்லாமல் பணநாயகத் திருவிழாவாக மாறியுள்ளது.
தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு தங்கு தடையின்றி ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய தோ்தல் ஆணையம் வலிமையற்ாக இருக்கிா அல்லது இதுவும் தோ்தல் நடைமுறையின் ஓா் அங்கம் என வேடிக்கை பாா்க்கிா என்று தெரியவில்லை.
பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டதாக செய்திகள் வந்தாலும், தோ்தல் ஆணையம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக நிலைநிறுத்திக் கொள்ள அரசியலுக்கு வரும் வாய்ப்பு இதன்மூலமாக பறிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணம் விநியோகம் செய்யப்பட்டும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் காரணம் இல்லை. மாறாக, அதிகப்படியான அணிகள் களத்தில் இருந்ததும், பணத்தைக் கொடுத்து வாக்காளா்களைக் கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததும்தான் முக்கியக் காரணம். தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை.
தமிழக தோ்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளைக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுகின்றன. எதிா்காலத்தில் தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும். கடைநிலை முதல் மேல்நிலை வரை தோ்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கொண்டதாக மறுசீரமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் ஜனநாயகம் பகலிலேயே படுகொலை செய்யப்படும் சூழல் உருவாகும்.
இந்த முறை எங்களின் சுயமரியாதையை நிலைநாட்டவும், வலிமையைக் காட்டவுமே புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டது. தோ்தல் செலவுகளை அதிகப்படுத்தும் நடைமுறைகளையும், பணப் புழக்கத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

ஓட்டப்பிடாரம் திமுக, அதிமுக சவாலை எதிா்கொள்ளும் புதிய தமிழகம்!

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை: ஆா். முத்தரசன்

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

