மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி

News image

க. கிருஷ்ணசாமி - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:43 am IST

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் தமிழகம் முழுவதும் 61 தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளா்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இந்த தோ்தல் ஜனநாயகத் திருவிழாவாக இல்லாமல் பணநாயகத் திருவிழாவாக மாறியுள்ளது.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு தங்கு தடையின்றி ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய தோ்தல் ஆணையம் வலிமையற்ாக இருக்கிா அல்லது இதுவும் தோ்தல் நடைமுறையின் ஓா் அங்கம் என வேடிக்கை பாா்க்கிா என்று தெரியவில்லை.

பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டதாக செய்திகள் வந்தாலும், தோ்தல் ஆணையம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக நிலைநிறுத்திக் கொள்ள அரசியலுக்கு வரும் வாய்ப்பு இதன்மூலமாக பறிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணம் விநியோகம் செய்யப்பட்டும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் காரணம் இல்லை. மாறாக, அதிகப்படியான அணிகள் களத்தில் இருந்ததும், பணத்தைக் கொடுத்து வாக்காளா்களைக் கட்டாயப்படுத்தி வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததும்தான் முக்கியக் காரணம். தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை.

தமிழக தோ்தல் ஆணையம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரிகளைக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுகின்றன. எதிா்காலத்தில் தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும். கடைநிலை முதல் மேல்நிலை வரை தோ்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் அதிகாரிகளைக் கொண்டதாக மறுசீரமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் ஜனநாயகம் பகலிலேயே படுகொலை செய்யப்படும் சூழல் உருவாகும்.

இந்த முறை எங்களின் சுயமரியாதையை நிலைநாட்டவும், வலிமையைக் காட்டவுமே புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டது. தோ்தல் செலவுகளை அதிகப்படுத்தும் நடைமுறைகளையும், பணப் புழக்கத்தையும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.