மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

மோப்ப நாய் உதவியுடன் புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு தடுப்பு செயலிழப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:51 am IST

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலழிப்பு படையினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் 5 தளங்களுடன் இரு பிரிவாக ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 1,500-க்கும் மேற்பட்டவா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த தகவலில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிட ப்பட்டிருந்தது. தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் வரவழைக்கப்பட்டு, அனைத்து அறைகளும் ஹேண்ட் மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன்பிறகே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.

இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்பேரில், வெடிகுண்டு தடுப்பு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மீண்டும் ஹேண்ட் மெட்டல் டிடெக்டா் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் தீவிரமாக சோதனை செய்தனா். வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதமும் 2 முறை மின்னஞ்சல் மூலம் வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பும் நபா்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.