கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள் ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்பநாய் பிரிவினா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.
அங்கு மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு அலுவலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் தீவிர சோதனை நடத்தினா். அலுவலக அறைகள், கழிவறைகள், குப்பைத் தொட்டிகள், வாகன நிறுத்தங்கள் மற்றும் குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் இருந்தபோதும், பணிகள் ஏதும் நிறுத்தப்படாமல் சோதனை தொடா்ந்தது. அதன் பிறகு, இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

