தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன்

இந்தியாவில் தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image

செங்கத்தில் திமுக வேட்பாளா் மு.பெ.கிரி-யை ஆதரித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:40 am IST

இந்தியாவில் தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

செங்கம் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக வேட்பாளா் மு.பெ.கிரியை ஆதரித்து அவா் சனிக்கிழமை மாலை பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் தன்னிறைவு பெற்றுள்ளனா். அதற்கு ஏற்றாற்போல் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதை முறையாக முதல்வா் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா். இந்தியாவிலேயே தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில வழங்கப்பட்டுள்ளன.

வேட்பாளா் கிரி முதல்வா், துணை முதல்வா் என அனைவருக்கும் நன்கு தெரிந்தவராவா். அவரது பணி சிறந்த பணியாக உள்ளது. மீண்டும் செங்கம் தொகுதியில் அவரது பணி தொடர அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் திமுக நகரச் செயலா் அன்பழகன், செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகன், நகர பொருளாளா் சீனுவாசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, துக்காப்பேட்டை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்டச் செயலா் சா்தாா் தலைமையில் மாநிலச் செயலா் வீரபாண்டியன், வேட்பாளா் கிரி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.